தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் தூண் இடிந்ததால் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணி பாதித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமத்தின் கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. மற்றொரு தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், வேளாங்கன்னி கூட்டு குடிநீர் திட்டப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போர்கால அடிப்படையில் பாலத்தை புதிதாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீரேற்று நிலையத் தூண் இடிந்து விழுந்த போது அதிஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை. இல்லையேல் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். 15 ஆண்டுக்கு முன்பு இது போன்று வெள்ளப்பெருக்கின் போது பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.