சபரிமலையில் ரூ.315 கோடிக்கு மேல் காணிக்கை வசூலாகியுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு சீசனில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் குவிந்ததால் உண்டியல் நிரம்பி வழிகிறது. சபரிமலையில் மகரவிளக்கு கால கடைசி நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை இரவு 10 மணிக்கு மாளிகைபுரத்தம்மன் குருதி நிகழ்ச்சிக்கு பிறகு நாளை மறுநாள் காலை 6:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. 2 மாதங்களாக நடைபெற்ற மண்டல பூஜை - மகரவிளக்கு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். ஜனவரி 12ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை மட்டும் ரூ.310.4 கோடியாகும். ஜனவரி 17ம் தேதி நிலவரப்படி ஐயப்பன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.315.46 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.