உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நேற்று கூடியது. இதில் தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட்நாராயண பாட்டி ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.