இராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நேற்று தொடங்கியது.
ராணுவ ஆள்சேர்ப்புக்கான தேர்வில் முதலில் நுழைவு தேர்வும், இரண்டாவதாக உடற்தகுதி தேர்வும், இறுதியாக இறுதித்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நாடு முழுவதும் 176 இடங்களில் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை,வேலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெற்றது.














