செங்கடல் வழியாக சென்ற ஒரு சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதனால் அந்த கப்பல் தீ பற்றி எரிந்ததாகவும், கப்பல் மாலுமிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மிதந்து கொண்டிருந்ததாகவும் இங்கிலாந்து ராணுவம் கூறியுள்ளது. ஏமன் துறைமுக நகரமான ஹோடைடாவுக்கு மேற்கே 140 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை இங்கிலாந்து ராணுவத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த கப்பல் செயலற்று போனது. அந்த சரக்கு கப்பலை நான்கு எரிகணைகள் முதலில் தாக்கியது. இந்த தாக்குதலில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஹவுதி தரப்பில் இதுவரை பொறுப்பேற்கவில்லை.