பிரதமர் மோடியின் அனைத்து திட்டங்களின் செயல்பாடுகளைச் சரியாக கண்காணிக்க புதிய குழு உருவாக்கப்பட்டது.
பிரதமர் மோடி, விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் மந்திரி சிவராஜ் சிங் சவுகானை தலைமையாகக் கொண்டு குழு அமைத்துள்ளார். இந்த குழு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்கும். இதுகுறித்து கடந்த 18-ந்தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில், மத்திய அரசின் அனைத்து துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். திட்டங்களில் குறைபாடு அல்லது ஆதரவு தேவைப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.