ஆடை விற்பனை நிறுவனமான படகோனியாவின் நிறுவனர் யோவன் சௌயினார்ட், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் தனது நிறுவனத்தின் மொத்த வருவாயையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சௌயினார்ட் சுமார் 3 பில்லியன்டாலர்கள் மதிப்புடைய தனது நிறுவனத்தையும் அதன்மூலம் பெறப்படும் அனைத்து வருவாயையும், காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும், காட்டு நிலங்களைப் பாதுகாப்பதற்கும் உழைக்கும் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு நன்கொடையாக வழங்குவதாகக் ௯றினார். இதற்கு அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் சம்மதித்து தங்கள் பங்குகளையும் நன்கொடையாக வழங்குகிறார்கள். இது குறித்து சௌயினார்ட் ,படகோனியா இணையபக்கத்தில் ஒ௫ கடிதத்தைப் பதிவிட்டார். அப்பதிவில், தற்போது பூமி மட்டுமே எங்களின் ஒரே பங்குதாரர் என்று ௯றியதோடு காலநிலை மாற்றத்தை பற்றியும் விளக்கினார். மேலும் சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்க பணம் தேவைப்படும். எனவே காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் படகோனியா பர்பஸ் டிரஸ்ட் மற்றும் ஹோல்ட்ஃபாஸ்ட் கலெக்டிவ் எனும் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் தொகுப்பு, நிறுவனத்தின் பங்குகளை இயற்கையை பேணுவதற்காக பயன்படுத்தும் என்று கூறினார். நிறுவனத்தின் தற்போதைய வருவாய் 100 மில்லியன் டாலர்கள் இ௫க்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒ௫ செய்தி அறிக்கை கூறுகிறது.