பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வருவதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கிறிஸ்துமஸ்,புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்கள் மேலும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ஆகியவை சேர்ந்து வருவதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவதை போன்று இம்முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. அதன்படி நாகர்கோவில் செல்ல அதிகபட்சமாக 3700 முதல் தற்போது 4,100 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை குறி வைத்து கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.