பாகிஸ்தான் இறக்குமதிக்கு முழுமையான தடை- இந்தியாவின் கடுமையான வர்த்தக முடிவு

இந்தியா பாகிஸ்தான் பொருள்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதித்துள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு திடமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இருநாடுகளுக்கிடையே நீண்ட காலமாக இருந்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் நீர் ஒப்பந்த முடிவுக்கு பதிலளிக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்திவிட்டது. […]

இந்தியா பாகிஸ்தான் பொருள்கள் இறக்குமதிக்கு முழுமையான தடை விதித்துள்ளது.

காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு திடமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இருநாடுகளுக்கிடையே நீண்ட காலமாக இருந்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்தது. இதையடுத்து, இந்தியாவில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் நீர் ஒப்பந்த முடிவுக்கு பதிலளிக்கும்படி பாகிஸ்தான், இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களையும் தடை செய்யும் வகையில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யவே கூடாது என்பதுடன், கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் மாற்றமும் செய்யப்பட்டு, புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பையும், பொது நலத்தையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், இந்த தடையை மீறுவதற்கோ விலக்களிக்க இந்திய அரசின் முன் அனுமதி அவசியம் எனவும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu