சந்திரயான் 3 விண்கலத்தை எல்விஎம் -3 ராக்கெட்டுடன் பொருத்தும் பணி நிறைவு

சந்திரயான் 3 விண்கலத்தை எல்விஎம் -3 ராக்கெட்டுடன் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி ‘லேண்டர்’ கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. இந்நிலையில் ரூ.615 கோடியில் சந்திரயான்-3 திட்டத்தை […]

சந்திரயான் 3 விண்கலத்தை எல்விஎம் -3 ராக்கெட்டுடன் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி ‘லேண்டர்’ கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது.

இந்நிலையில் ரூ.615 கோடியில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதையடுத்து தற்போது வடிவமைப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், எல்விஎம் -3 ராக்கெட் மூலமாக சந்திரயான்-3 விண்கலம் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 13ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu