சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்கு பயன்படுத்தும் குதிரைகளுக்கு இனி மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து உரிமம் எடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குதிரைகள் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு குதிரை சவாரி மிகவும் பிரபலமான ஒன்றாகும். குதிரை வளர்ப்பு உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் துன்புறுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சில குதிரைகள் பராமரிப்பு இல்லாமல் இறந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை தடுக்க தமிழ்நாடு கால்நடை நல வாரியம் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து குதிரைகளுக்கு உரிமம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குதிரைகளுக்கு என பிரத்தியேகமாக சென்னை திருவல்லிக்கேணியில் புகலிடம் அமைக்க விலங்குகள் உரிமை அமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இவற்றிற்கு சரியான உணவு கிடைக்கவும் ஆரோக்கியமாக பராமரிக்கப்படவும் வேண்டும் என்பதற்காகவே உரிமம் வழங்க பரிந்துரைத்துள்ளனர் என்று கூறுகின்றனர்.