மாட்டுத் தொழுவங்களுக்கு கட்டாய லைசென்ஸ்

சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசன்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சமீப காலமாக நாய்களால் சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை வகுத்து அத்துடன் சில கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் அமல்படுத்தியுள்ளது. அவ்வகையில் மாடுகள் விஷயத்திலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாடுகளினால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருவதால் […]

சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசன்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் சமீப காலமாக நாய்களால் சிறுவர், சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்த விதிமுறைகளை வகுத்து அத்துடன் சில கட்டுப்பாடுகளையும், அபராதங்களையும் அமல்படுத்தியுள்ளது. அவ்வகையில் மாடுகள் விஷயத்திலும் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாடுகளினால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இரவு நேரங்களில் சாலைகளை ஆக்கிரமித்தபடி வலம் வருவதால் சில விபத்துகள் ஏற்பட்டு தவிர்க்க முடியாத உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மாடு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் உரிய கவனத்துடன் பராமரிக்கும் படி மாநகராட்சி வலியுறுத்தியதுடன் மாட்டு தொழுவங்களுக்கு கட்டாயமாக லைசன்ஸ் பெற வேண்டும் என்ற விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu