தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். மேலும் இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் போலீசார் பல வழக்குகளின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். இதனை அடுத்து பல்வேறு நீதிமன்றங்களில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கிலிருந்து சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.