சில்லறை முறையில் கடைகளில் விற்கப்படும் இனிப்புகளுக்கு, காலாவதி தேதியை கட்டாயமாக குறிப்பிடப்பட தேவையில்லை என எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவித்துள்ளது.பொதுவாக, பேக் செய்யப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதனை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 1, 2020 முதல், கடைகளில் சில்லறையாக விற்கப்படும் இனிப்பு வகைகளுக்கும் காலாவதி தேதி குறிப்பிட எஃப் எஸ் எஸ் ஏ ஐ உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, சில்லரையாக விற்கப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி குறிப்பிட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள கடைகள் தேதியை குறிப்பிட்டு விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எஃப் எஸ் எஸ் ஏ ஐ உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.