ஆப்பிரிக்க நாடான காங்கோவில், கீவு ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்தனர்.
கிழக்குப் பகுதியில் உள்ள கீவு ஏரியில் நடைபெற்ற இந்த விபத்தில், படகில் எவ்வளவு பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இதனால் மொத்த உயிரிழப்புகள் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. விபத்துப் பகுதியிலிருந்து 10 பேர் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. காங்கோவில் பொதுவாக நீர்வழிப் பயண விதிமுறைகள் பின்பற்றப்படாததால், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுவதுடன், அதில் பல உயிரிழப்புகளும் பதிவாகின்றன.