கடந்த வாரம், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று உள்ளது. கீவு மாகாணத்தில் உள்ள பெனி என்ற பிராந்தியத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது இந்த தாக்குதலை, இஸ்லாமிய தேச அதாவது ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஏடிஎப் படையினர் நிகழ்த்தியுள்ளனர். இதில் 17 அப்பாவி பொதுமக்கள் பதிவானதாக தகவல் வெளிவந்துள்ளது.
காங்கோ நாட்டில், விலை மதிப்புள்ள தாது பொருட்களுக்கான சுரங்கங்கள் உள்ளன. எனவே, அந்நாட்டில், நிலம் மற்றும் சுரங்கங்களுக்காக அடிக்கடி தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, அந்நாட்டில் 120க்கும் மேற்பட்ட ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், ஏடிஎப் பயங்கரவாத அமைப்பு தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரிவால் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும், கடந்த இரு மாதங்களாக 370 பேர் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.