பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகி உள்ளதாக அறிவித்துள்ளது
டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் உள்ளது அதே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி அதற்கு எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கு இடையிலும் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தயாராகி வருவதாகவும் அதே நேரம் ஆம் ஆத்மி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் எனவும் காங்கிரஸ் தலைவர் அரவிந்தர்சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.