காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அடுத்த மாதம் 13ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.
மக்களவை தேர்தல் 2024 தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேளையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொகுதி பங்கீடு,கூட்டணி தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அடுத்த மாதம் 13ம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களிடையே மல்லிகார்ஜுன கார்கே பேச உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் அவர் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.