ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

January 24, 2024

தமிழக கவர்னர் ஆர்.என் ரவி காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை என கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை என தமிழக கவர்னர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைக்காக சத்தியம், அஹிம்சை என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலை பெறுவதற்கு தன் வாழ்நாளையே […]

தமிழக கவர்னர் ஆர்.என் ரவி காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை என கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது.

ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை என தமிழக கவர்னர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைக்காக சத்தியம், அஹிம்சை என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலை பெறுவதற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் மகாத்மா காந்தி. இவரது பங்களிப்பை கொச்சைப்படுத்துகிற வகையில் காழ்புணர்ச்சியோடு ஆளுநர்.ரவி கருத்து கூறியிருப்பதால் காங்கிரஸ் தரப்பில் வன்மையாக கண்டிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu