கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், கேரளாவில், புதுப்பள்ளி தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.
புதுப்பள்ளி தொகுதியின் வெற்றி வேட்பாளராக முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இருந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்பு மறைந்ததை அடுத்து, அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவரது சார்பில், அவரது மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன்படி, சாண்டி உம்மன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இடது ஜனநாயக முன்னணி கூட்டணியின் வேட்பாளரை விட 36454 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 33255 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டதே அதிகபட்ச பதிவாக இருந்தது. இது சாண்டி உம்மனின் தந்தை உம்மன் சாண்டியின் சாதனையாகும். தற்போது, தந்தையின் சாதனையை மகன் முறியடித்துள்ளார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு மொத்தம் 78098 வாக்குகள் கிடைத்துள்ளன.