காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்பது பிரச்சனைகளை தீர்க்க கேள்வி எழுப்புவோம் கடிதம் எழுதியுள்ளார்.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு கூட்டபடுகிறது. இது குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. மேலும் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை வெளியிட வேண்டும். இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.
இங்கு கலந்து கொண்டு பொதுவான பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப இது வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு, சமத்துவமின்மை, சிறு தொழில்கள் மீதான அழுத்தம், தற்போதைய பொருளாதார நிலை, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட 9 முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசுவோம் என்று சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.