மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய ராணுவ சேவை திட்டம் - ரிஷி சுனக்

May 27, 2024

கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் கட்டாய தேசிய இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜூலை நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் கூறுகையில், இங்கிலாந்து இன்று மிகவும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கிறது. இந்த சமூகத்தில் இளைஞர்களுக்கு தகுதியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி பிளவு பட்ட எதிர்காலத்தை எதிர்கொள்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புது […]

கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்கள் கட்டாய தேசிய இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜூலை நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பிரதமர் கூறுகையில், இங்கிலாந்து இன்று மிகவும் ஆபத்தான சூழலை எதிர்கொள்கிறது. இந்த சமூகத்தில் இளைஞர்களுக்கு தகுதியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி பிளவு பட்ட எதிர்காலத்தை எதிர்கொள்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புது மாதிரியான தேசிய இராணுவ சேவையை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். இது 18 வயதுடையவர்களுக்கானது. அதன்படி ஆண்டு முழுவதும் ராணுவ சேவைக்கான வாய்ப்பு அல்லது வார இறுதியில் தன்னார்வ தொண்டு செய்யும் வாய்ப்புக்கான திட்டம் வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் திறன் மேம்படும். இதனால் இங்கிலாந்து வலுப்பெறும் என்று அவர் கூறினார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இங்கிலாந்தில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவப்படையில் 18 மாதங்கள் பணியாற்ற தேசிய இராணுவ சேவை திட்டம் கன்சர்வேஷன் ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது 1960 ஆம் ஆண்டு அரசால் நிறுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் கட்டாய ராணுவ சேவை சட்டம் அமலில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu