தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 1749 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமையில் கூட்டணியான நான்கு முனை தேர்தல் நடைபெறுகிறது. இதன் தொகுதி பங்கீடு வேட்பாளர் தேர்வு என பல்வேறு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி இதுவரை தமிழக முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 1749 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசோதனை இன்று நடைபெறுகிறது.