அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கின.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியுள்ளார். 161 அடி உயர கோபுரம் 4 மாதங்களில் முடிவடைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கு ஏழு முனிவர்களுக்கான கோயில்கள் கட்டும் பணியும் துரிதமாக நடைபெறுகிறது. இவை அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது