வரும் பாராளுமன்ற தேர்தலில் குலாம் நபி ஆசாத் ராஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்கள் ஆக நடைபெற உள்ளது. அதில் ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு முன்னாள் முதல் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்த குலாம் நபி ஆசாத் 2022 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு விடுதலைக் கட்சியை தொடங்கினார். இந்நிலையம் இவர் தற்போது ரஜோரி மாவட்டம் அனந்தநாக் தொகுதியில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.