ரூ. 9,805 கோடி மதிப்பில் ஏவுகணைக் கப்பல்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கொச்சி ஷிப்யார்டு நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த தலைமுறை ஏவுகணைக் கப்பல்கள், அதிகளவிலான ஆயுதங்களை உடைய கப்பலாகவும், எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையிலும், அதிக வேகத்தில் சென்று எதிரி இலக்குகளை தாக்கும் திறனுடையதாகவும் இருக்கும். கடல்சார் தாக்குதல் நடவடிக்கைகள், தரைஇலக்குகள், எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்குவதற்கும் இந்த கப்பல்களை பயன்படுத்த முடியும். இந்த கப்பல்கள் 2027-ம் ஆண்டு மார்ச் முதல் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.