வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிவிரைவு ரயில் ஆக மாற்றி இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு தினமும் இரவு மற்றும் மாலை வேலைகளில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இரவு 8.10 மணிக்கும், மாலை 3:40 மணிக்கு இயங்குகிறது.இனி இது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அதிவிரைவு ரயில் ஆக மாற்ற இயக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக 7.50க்கு புறப்படும். இது திருச்சி, மதுரை, நெல்லை ரயில் நிலையங்களுக்கு வழக்கமான நேரத்தை விட 20 நிமிடங்கள் முன்னாள் சென்றடையும். அதேபோல் கொல்லத்திற்கு மறுநாள் 11.40 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கு சென்றடையும். மீண்டும் கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 3:40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் முன்னதாக 2. 50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு அடுத்த நாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.