டென்மார்க்கில் 400 வருடங்கள் பழமையான பங்குச் சந்தை கட்டிடத்தில் தீ விபத்து

April 16, 2024

டென்மார்க் நாட்டின் முன்னாள் பங்குச் சந்தை கட்டிடம் 400 வருடங்கள் பழமையானதாகும். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Copenhagen இன் முக்கிய அடையாளமாக திகழும் பங்குச் சந்தை கட்டிடம், தீ விபத்து காரணமாக முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. கடந்த 1970 கள் வரையில் டென்மார்க் நாட்டின் பங்குச்சந்தை மையமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம், தற்போது, அந்நாட்டின் வர்த்தகத்துறை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தை […]

டென்மார்க் நாட்டின் முன்னாள் பங்குச் சந்தை கட்டிடம் 400 வருடங்கள் பழமையானதாகும். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Copenhagen இன் முக்கிய அடையாளமாக திகழும் பங்குச் சந்தை கட்டிடம், தீ விபத்து காரணமாக முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. கடந்த 1970 கள் வரையில் டென்மார்க் நாட்டின் பங்குச்சந்தை மையமாக செயல்பட்டு வந்த இந்த கட்டிடம், தற்போது, அந்நாட்டின் வர்த்தகத்துறை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் நகரின் சிறப்புமிக்க தேவாலயம் தீக்கிரையாகிய நாளின் ஐந்தாம் ஆண்டு நினைவு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மறுநாளே, டென்மார்க்கில் இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu