கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு நாளில் மட்டும் 173 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டதாகவும், இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.