கொரோனாவிற்கு பின் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியுள்ளது. இதற்கான காரணம் குறித்து மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவிற்கு பின் மாரடைப்பு பாதிப்பின் காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான திடீர் மாரடைப்பு ஏற்படுவதன் காரணத்தை அறிய 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் மத்திய அரசு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவியை வழங்கி வருகிறது. இதனைக்கொண்டு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதயம் சார்ந்த பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோருக்கு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதேவேளையில் கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து 30 மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வ்