முடா நில முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதலமைச்சர் சித்தராமையா மீது 'முடா' நில முறைகேடு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர், கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாகபிரசன்னா, அந்த மனுவை நிராகரித்து, கவர்னரின் உத்தரவு செல்லும் என உத்திவிட்டார். அதன் பின்னர், லோக் ஆயுக்தா போலீசாருக்கு விசாரணைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், அவர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தராமையாவின் மனைவி மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் பெறப்பட்ட 14 மனைகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.