நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் எத்தனை வாகனங்கள் வருகின்றன, எத்தனை பேர் வருகின்றார்கள் என்கின்றதை முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொண்டு ஊட்டிக்கு வரவேண்டும். இதனை ஆய்வு செய்வதற்காக நீலகிரி மாவட்டத்தில் 16 சோதனை சாவடிகளில் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த இ- பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஊட்டி காட்டேஜ் உரிமையாளர் கடந்த இரண்டு நாட்களாக ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜுகள் வெறிச்சோடி இருப்பதாக கூறி வருகின்றனர். இதனால் காட்டேஜ் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே இ- பாஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் மலர்க்கண்காட்சி நடைபெறும் நாளில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்து வருகின்றனர்