காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்- தென்னிந்திய நூற்பாலைகள் கூட்டமைப்பு அறிவிப்பு!!!

நூற்பாலை தொழில் நஷ்டத்தை சந்தித்து வருவதால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் , கோவை மாவட்டத்தில் நூற்பாலைகளில் இருந்து தினந்தோறும் 1400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை வழங்கப்படாததால் நூற்பாலைகள் நஷ்டம் அடைந்து விரைவில் நிரந்தரமாக மூடும் நிலை உருவாகியுள்ளது. […]

நூற்பாலை தொழில் நஷ்டத்தை சந்தித்து வருவதால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் சிறு குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் , கோவை மாவட்டத்தில் நூற்பாலைகளில் இருந்து தினந்தோறும் 1400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை வழங்கப்படாததால் நூற்பாலைகள் நஷ்டம் அடைந்து விரைவில் நிரந்தரமாக மூடும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து தென்னிந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு கவுரவ செயலாளர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி 28% வரை குறைந்துள்ளது. மேலும் பஞ்சில் இருந்து நூல் மாற்றத்திற்கான விலை கிலோவுக்கு 2 ஆக இருக்க வேண்டிய நிலையில் 1 ரூபாயாக இருக்கிறது இதனால் கிலோவுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது 10,000 ஸ்பின்டில்கள் கொண்ட ஆலைக்கு தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

மேலும்  வங்கி கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல், மின் கட்டணம் ,  ஜிஎஸ்டி போன்ற செலவினங்கள் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசு பஞ்சு மீதான 11% இறக்குமதி வரியை ரத்து ,வங்கி கடன் வட்டி விகிதங்கள் குறைப்பு, அந்நிய நூல் துணி வகைகள் இறக்குமதி தடுப்பு  மற்றும் மின்கட்டண உயர்வு திரும்ப பெறுதல் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தம் ஏற்படும்.  நாளொன்றுக்கு ரூபாய் 85 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் மற்றும் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu