தமிழகத்தில் மருத்துவப்படிப்பின் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இவ்விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தர வரிசை பட்டியலின்படி இன்று 25,856 இடங்களை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பொதுப் பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும். இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














