நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. அதன்படி வாக்கு எண்ணும் பணிக்கு 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவேந்திரங்களை எடுத்து வைக்கும் பணிக்கு 24,000 பேரும், நுண்பார்வையாளர்களாக 4,500 பேரும் என மொத்தம் 38,500 பேர் ஈடுபடுகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள 39 மையங்களில் 43 கட்டிடங்களில் வாக்கு என்னும் பணி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த மையங்களில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவேந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னும் பணியும் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்