அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணி பரமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜனவரி 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை 17 முறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.