செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் 22 வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது இவரது நீதிமன்ற காவல் மார்ச் 4ம் தேதி வரை நீடிக்க பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து 22 வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.