‘மாநில மொழியில் நீதிமன்ற தீர்ப்புகள்’  - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மோடி பாராட்டு

January 23, 2023

‘மாநில மொழியில் நீதிமன்ற தீர்ப்புகள்’என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை மோடி பாராட்டியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்கச் செய்ய பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மேலும், இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது பலருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது’’ என்று பதிவிட்டுள்ளார். […]

‘மாநில மொழியில் நீதிமன்ற தீர்ப்புகள்’என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்கச் செய்ய பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மேலும், இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது பலருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு மிகுந்த பலன் தரக்கூடியது’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றொரு டிவிட்டில் பிரதமர் மோடி, ‘‘நமது கலாச்சாரத்தை பறைசாற்றும் பல மொழிகள் இந்தியாவில் உள்ளன. பொறியியல், மருத்துவம் போன்ற பாடங்களை தாய்மொழியில் படிப்பது உள்ளிட்ட இந்திய மொழிகளை ஊக்குவிக்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu