தெலுங்கானாவில் சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியது.
தெலுங்கானாவில் 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு, அதிகாலை நேரத்தில் பெருமளவு ரசிகர்கள் திரும்பி உள்ளனர். இதில், நடிகர் அல்லு அர்ஜூனைப் பார்த்து பெரும் கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார் மற்றும் அவரது மகன் படுகாயம் அடைந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதன் பிறகு, திரைப்பட டிக்கெட் விலை உயர்வு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி குறித்து தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்குகளில் அனுமதிக்கக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவு வழங்கியது.