கர்ப்பிணிக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு கருவில் உள்ள சிசுவை பாதிக்கும் - ஆய்வுத் தகவல்

January 25, 2023

கர்ப்பமாக இருக்கும் பொழுது, ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. வியன்னா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டன. அதில், கொரோனாவின் பல்வேறு வேரியண்ட் வைரஸ் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்த முதல் கொரோனா வைரஸ் வேரியண்ட் பாதிப்பு மூலம், கருவில் இருக்கும் சிசுவுக்கு அதிக பாதிப்பு ஏற்படுதாக தெரியவந்துள்ளது. […]

கர்ப்பமாக இருக்கும் பொழுது, ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

வியன்னா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டன. அதில், கொரோனாவின் பல்வேறு வேரியண்ட் வைரஸ் பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதன்படி, கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்த முதல் கொரோனா வைரஸ் வேரியண்ட் பாதிப்பு மூலம், கருவில் இருக்கும் சிசுவுக்கு அதிக பாதிப்பு ஏற்படுதாக தெரியவந்துள்ளது. மேலும், டெல்டா வகை ஒமைக்ரான் பாதிப்பால், ரத்தம் கட்டுதல் போன்ற பாதிப்புகள் நேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் சிசு மற்றும் நச்சுக்கொடி ஆகியவற்றிலிருந்து திசுக்கள் எடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணிகள் மற்றும் செலுத்தாத கர்ப்பிணிகள் ஆகியோரை ஆய்வு செய்ததில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட 6 கர்ப்பிணிகளில் ஒருவருக்கே சிசு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2 கர்ப்பிணிகள் ஆய்வு செய்யப்பட்டதில் இருவருக்குமே சிசு பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu