உலக கோப்பை கிரிக்கெட் 2023 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணியுடன் நாளை சந்திக்க இருக்கின்றது. இதற்காக சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி.எம் மைதானத்தில் இரண்டு மணி அளவில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டன. இந்த முறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு முதன் முறையாக ட்ரோன்கள் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள 10 கேமராக்கள் மூலம் போலீஸார்கள் போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை கண்காணிக்க உள்ளனர். ரசிகர்கள் வரும் வாகனங்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளது. மேலும் இதனை போலீசார் தங்கள் செல்போனில் பார்க்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.