இந்தியா, கடந்த மே மாதத்தில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்தத் தடை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. உள்நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த இந்த தடை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் உற்பத்தியில் புதிய உச்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் வருடத்தில், 8 மில்லியன் டன் அளவில் ஏற்றுமதி ஏற்படலாம் என நம்பப்படுகிறது. சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் கணிப்புப்படி, 2022-23 ஆண்டில் 9 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்து, சர்வதேச வணிகத்தில் முன்னிலை வகிக்கும் என அறியப்படுகிறது.
நடப்பு ஆண்டில், முறையான பருவ மழை இல்லாததால், சர்க்கரை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டில், எத்தனால் உற்பத்திக்கு 4.5 மில்லியன் டன் சர்க்கரையும், சுவையூட்டிக்காக 36.5 மில்லியன் டன் சர்க்கரையும் பயன்படுத்தப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முந்தைய பருவத்தில் கிடைத்த சர்க்கரை 2% பங்களிப்பை பெறும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்க்கரை உற்பத்தியின் பெரும் பகுதி சர்க்கரை ஆலை உரிமையாளர்களுக்கு தரப்படுவது உறுதி ஆகிறது. எனவே, ஏற்றுமதி தடை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த நிதியாண்டில், சர்க்கரை ஏற்றுமதி 57% உயர்ந்து, 109.8 லட்சம் டன்களாக இருந்தது. இதன் மூலம் 40,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட பட்டது. மேலும், கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை வெறும் 6 ஆயிரம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. அத்துடன், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு தர வேண்டிய 1.18 லட்சம் கோடி ரூபாயில் 1.12 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுவிட்டது. எனவே, நடப்பு நிதியாண்டில், சீரான நிலை ஏற்படும் வகையில், ஏற்றுமதி தடை நீட்டிக்கப்படுவதாக பேசப்படுகிறது.