மணிப்பூரில் 16 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு 

மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்த்தி என்ற சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் மெய்த்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் ஆக மாறி, […]

மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மெய்த்தி என்ற சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் மெய்த்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் ஆக மாறி, கலவரமாக வெடித்தது.

மேலும் பாதுகாப்பு படையினர் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்பாமல் இருக்க இந்த மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu