செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. முழுக்க முழுக்க சல்பர் என்ற வேதிப் பொருளால் ஆன பாறை கற்களை கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இது போன்ற கற்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 30ஆம் தேதி, கியூரியாசிட்டி ரோவர் பயணித்த பாதையில் முழுக்க முழுக்க சல்ஃபர் பொருளால் ஆன கற்கள் இருந்துள்ளன. எதிர்பாராத விதமாக இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சல்பர் கற்கள் மூலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.