கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் விரைவில் மாற்றம் -அமைச்சர் பொன்முடி

September 13, 2022

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநாட்டை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது […]

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் விரைவில் மாற்றப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மண்டல மாநாடு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 68 பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநாட்டை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் பொன்முடி பேசுகையில், 2007-ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் கொண்டுவரபட்டது. இதனால் அதிக அளவிலான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பொறியியல் கல்லூரிகளில் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் முயற்சி எடுத்து வருகின்றார். கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விரைவில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றார்.

மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் டி. உதயச்சந்திரன் ஆகியோர் அனைத்து துறை படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவருவது குறித்து பேசினர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu