அங்கீகாரம் இல்லாத செயலிகள் மற்றும் இணையதளங்களை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘ஜிப்லி’ வகை செயற்கை நுண்ணறிவு அனிமேஷன் புகைப்படங்களை உருவாக்கும் செயலிகள் அண்மையில் பெரும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த செயலிகளில் அங்கீகாரம் இல்லாதவை பல உள்ளன என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. பொதுமக்கள், தெரிந்தோ தெரியாமலோ தங்களது பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் புகைப்படங்களை இந்த செயலிகளில் அளிக்கின்றனர். இதன் மூலம், அவர்களது தனிப்பட்ட தகவல்கள் மூன்றாவது நபர்களிடம் பகிரப்பட்டு, விளம்பர நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. மேலும், இத்தகவல்கள் ‘டீப் பேக்’ உருவாக்கங்களிலும் பயன்படுத்தப்படலாம். சில செயலிகள், தொலைபேசியில் வைரஸ் புகுந்து, அதிலுள்ள தகவல்களை திருடும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே, அங்கீகாரம் இல்லாத செயலிகள் மற்றும் இணையதளங்களை தவிர்க்க வேண்டும். ஏதேனும் சந்தேகத்துக்கிடமான சூழலில் சிக்கினால், மக்கள் ‘1930’ என்ற இலவச எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாநில சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.