ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க புதிய சட்டம் உருவாக்கப்படுகிறது.
இதை பற்றி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகள் குழந்தைகள் சந்திக்கும் மோசமான உள்ளடக்கங்களை தடுக்கத் தவறி விட்டன. ஆகையால் சமூக ஊடகங்களை இளம் பயனர்கள் பயன்படுத்த தடை கொண்டு வரவேண்டும் என்று கூறினார். சமூக ஊடகங்கள் பிள்ளைகளை சீரழித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சட்டம் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.