வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர நகரங்கள் மோக்கா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.