தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிவில் ராமபோசா பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ராமபோசா நேற்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைநகர் பிரடோரியாவில் உள்ள யூனியன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பொறுப்பேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ரேமண்ட் ஜோண்டா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விரைவில் அவரது அமைச்சரவையை அறிவிப்பார். தென் ஆப்பிரிக்கா நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 29ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 400 உறுப்பினர்களைக் கொண்டது தென்னாபிரிக்க நாடாளுமன்றம்.
தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக பெரும்பான்மை இழந்தது. ஜனநாயக முன்னணி மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏஎன்சி கட்சி மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டின் அதிபராக சீரியல் ராமபோசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர்கள் 283 வாக்குகள் கிடைத்தன.