பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்கும் டாபர் இந்தியா நிறுவனம்

October 26, 2022

இந்தியாவின் முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமான டாபர், பாட்ஷா மசாலா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 587.52 கோடி ரூபாய்க்கு இந்தப் பங்குகள் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 25000 கோடி ரூபாய் மதிப்புடைய ‘இந்திய மசாலா பொருட்கள் விற்பனை’ சந்தையில் டாபர் நிறுவனம் களமிறங்குகிறது. பாட்ஷா மசாலா நிறுவனத்தின் மீதமுள்ள 49% பங்குகளும் அடுத்த 5 ஆண்டுகளில் கையகப்படுத்தப்படும் என்று டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய […]

இந்தியாவின் முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமான டாபர், பாட்ஷா மசாலா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 51% பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 587.52 கோடி ரூபாய்க்கு இந்தப் பங்குகள் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 25000 கோடி ரூபாய் மதிப்புடைய ‘இந்திய மசாலா பொருட்கள் விற்பனை’ சந்தையில் டாபர் நிறுவனம் களமிறங்குகிறது. பாட்ஷா மசாலா நிறுவனத்தின் மீதமுள்ள 49% பங்குகளும் அடுத்த 5 ஆண்டுகளில் கையகப்படுத்தப்படும் என்று டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், பாட்ஷா நிறுவனத்தின் மதிப்பு 1152 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய டாபர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மோஹித் பர்மன், “இந்தியாவில் மசாலா வர்த்தகம் மிகப்பெரிய சந்தை மதிப்பு கொண்ட துறையாகும். இதில் பாட்ஷா மசாலா நிறுவனம் திறம்பட செயலாற்றி வருகிறது. உணவுப் பொருட்கள் சார்ந்த விற்பனையில் இயங்கி வரும் எங்கள் நிறுவனம், மசாலா பொருட்கள் என்ற புதிய துறையில் களமிறங்க உள்ளது. இதற்காக, பாட்ஷா மசாலா நிறுவனத்தின் 51% பங்குகளை கையகப்படுத்தி உள்ளோம். இந்த துறையில் தன்னிகரில்லா தரமுள்ள பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் எங்கள் வர்த்தகத்தை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை மூலம், பாட்ஷா மசாலா நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய பாட்ஷா மசாலா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஹேமந்த் ஜாவேரி, “டாபர் நிறுவனம் எங்கள் வளர்ச்சிக்கு மிகவும் துணை புரியும். அத்துடன், எங்கள் பொருட்களை உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லவும் பல நிலைகளில் உதவிகள் செய்யும்” என்று கூறினார். டாபர் நிறுவனம், ஷவான்பிரஸ், தேன், புதினாரா, பற்பசைகள், நெல்லிக்காய், வாட்டிகா எண்ணை மற்றும் பிற உணவு மற்றும் உடல் பராமரிப்பு சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 10,889 கோடி ரூபாய் வருவாயையும், 1742 கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மசாலா பொருட்கள் வர்த்தகம் மூலம், நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu